Saturday, 23 November 2013

திரும்பாத இரவுகள்


முன் கதவு திறந்திருக்கிறது
பின் கதவை பயன்படுத்த வேண்டாம்.

நண்பர்கள் போல
திருடர்கள் வருவதை
அனுமதிக்க முடியாது.

பிச்சைக்காரர்களுக்கும்
ஆதரவற்றவர்களுக்கும்
மேஜை மீது உணவிருக்கிறது.

மது அருந்துபவர்களுக்கு
குவளையில் சாராயமும்
இரண்டு கோப்பைகளும் இருக்கின்றன.

இளைப்பாற கட்டிலும் மெத்தையும்
மூலையில் கிடக்கின்றன.

சுவரிலிருக்கும் மனிதனை
இகழாதவரை
உறவுக்கு உத்திரவாதமுண்டு.

இரத்தக் கறை படிந்த புன்னகையை
மறக்காமல் எடுத்துக் கொண்டு
இரவு வருவதற்கு முன்
விடை பெறுங்கள்.

வீட்டைப் பூட்ட வேண்டும்.
                               - ஸ்நேகிதன்